திரையுலகில் 14 ஆண்டு: ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ஸ்ருதி!

நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன் தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி படங்களில் நடித்து 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

கமல்ஹாசன் – சரிகா தம்பதிகளுக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹே ராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

2009 ஆம் ஆண்டில் நடிகர் இம்ரான்கான் ஜோடியாக ‘லக்’ எனும் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த அவர், சூர்யா நடிப்பில் வெளியான ‘ஏழாம் அறிவு’ எனும் படத்தின் மூலம் தமிழிலும் நடிகையாக அறிமுகமானார்.

இதனை அடுத்து ‘3’, ‘பூஜை’, ‘புலி’, ‘வேதாளம்’, ‘சிங்கம் 3’, ‘லாபம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் திரையுலகில் 13 ஆண்டை நிறைவு செய்திருக்கிறார்.

இதற்காக தன் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

”திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பதிமூன்று ஆண்டுகளை அற்புதமான ஆண்டுகளாக நிறைவு செய்திருக்கிறேன்.

வாழ்நாள் முழுவதும் ரசிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டே இந்த பதிமூன்று ஆண்டு நிறைவை உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன்.

என் திரையுலக வாழ்க்கை, ஒரு மாயாஜாலமிக்கது. திரைப்படத்தில் நடிப்பேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.

ஏதேனும் எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது.

அதே தருணத்தில் எனக்கு விருப்பமான வேலையை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.

மாயாஜாலம் மிக்கதாக கடந்த பதிமூன்று ஆண்டுகள் கழிந்தது. ஒரே ஒரு படத்தில் தான் நடிப்பேன் என நினைத்திருந்தேன். அதே தருணத்தில் நான் நடிகையாக இருக்கவேண்டும் என்றும் நினைக்கவில்லை.

பிறகு அதனை நேசிக்க கற்றுக்கொண்டேன். சினிமா என் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது.

இதற்கு நான் உண்மையில் நன்றி உள்ளவளாக இருக்கும் வகையில் வாழ்க்கை என்னை மாற்றி அமைத்திருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment