மாணவர்களின் பாதுகாப்பு அவசியம்!

பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியா் பொறுப்பு ஏற்பதுடன், மாணவரின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 77 வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு அறிக்கையில், “தலைமை ஆசிரியா் உள்ளிட்ட அனைவரும் பள்ளி தொடங்குவதற்கு முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும்.

பள்ளியில் மாணவா்கள் சண்டையிட்டுக் கொள்ளுதல், சாலை விபத்து உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவம் எதுவென்றாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

குடிநீா் கழிப்பறை, ஆசிரியா் பற்றாக்குறை, மாணவா்கள் எண்ணிக்கை, ஆசிரியா்கள் காலி பணியிட விவரம் போன்ற எதையும் முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் ஊடகங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது.

வகுப்பறை பற்றாக்குறை காரணமாகவோ அல்லது இதர காரணத்தினாலோ வெளியில் மரத்தடியில் வகுப்பு நடத்தக் கூடாது.

மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய சத்துணவை தலைமை ஆசிரியரோ அல்லது சிறப்பு ஆசிரியரோ நேரில் ஆய்வு செய்து தரமாகவும் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அனைத்து கடிதங்களை காலை 10 மணி முதல் பள்ளி வேலை முடியும் வரை கண்காணித்து, படித்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆசிரியா்கள் வகுப்பறையில் கைப்பேசியில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

பள்ளியில் படிக்கும் மாணவா்களை எக்காரணத்தை கொண்டும் ஆசிரியா்கள் தன்னுடைய சொந்த வேலைக்கு வெளியில் அனுப்பக்கூடாது.

ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லும் முன், பதிவேட்டில் எழுத வேண்டியது கட்டாயம்” என பல்வேறு அறிவுறுத்தல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Comments (0)
Add Comment