தண்ணீர் பகிர்வு நடைமுறையை அமல்படுத்த கோரிக்கை!

மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட 16-ஆவது காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நேற்று டெல்லி பிகாஜிகாமா அலுவலக் கட்டடத்தில் நடைபெற்றது.

ஆணையத்தின் தலைவா் சௌமித்ர குமார் ஹல்தாரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆணைய உறுப்பினா்களான நவீன் குமார், ஒன்றிய வேளாண்மைத் துறை இணைச் செயலா் கோபால் லால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் தமிழக நீா்வளத்துறை செயலா் சந்தீப் சக்ஸேனா, காவேரி தொழில்நுட்பக் குழு தலைவா் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தமிழக நீா்வளத்துறை செயலர் சந்தீப் சக்ஸேனா காவிரி நீா்பிடிப்பு பகுதிகளில் மழை பொய்த்திருக்கும் ஆண்டுகளில் தண்ணீா் பகிர்வு குறித்த நடைமுறைகளை ஆணையம் முறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்தினார்.

Comments (0)
Add Comment