பள்ளிகளில் தொடரும் தற்கொலை முயற்சி!

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் மீனவக் குப்பத்தைச் சேர்ந்த 14 வயதுடைய கஜா சுபா நித்ரா மகாபலிபுரம் அருகிலுள்ள பூஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற 9ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் கண்டித்ததாகக் கூறப்படகிறது. மேலும் மாணவியின் பெற்றோரிடத்திலும் பேசப்போவதாக ஆசிரியர் தெரிவித்ததால் மாணவி கடும் மன உளைச்சலுக்கு ஆளானாத கூறப்படுகிறது.

இதனால் கஜா சுபா நித்ரா பள்ளியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து உடனடியாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர  சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் பள்ளி மாணவியின் தற்கொலை முயற்சி  குறித்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி வளாகத்திலேயே நடந்த பள்ளி மாணவியின் இந்த தற்கொலை முயற்சியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment