நீட் தேர்வு சோதனை: 5 பேர் கைது!

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன அவலம் கேரளாவில் அரங்கேறியது.

இது குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து கடும் கோபமடைந்த பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் நீட் தேர்வின்போது சோதனையில் ஈடுபட்ட 5 பெண்களை கைது செய்துள்ளனர்.

இதில், 3 பேர் தேர்வு முகமை பணியாளர்கள், 2 பேர் கல்லூரி ஊழியர்கள் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தேர்வு மைய வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதியாகியுள்ளது.

முன்னதாக இந்தச் சோதனையால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தேர்வு நடந்த பள்ளியின் மீது தாக்குதல் நடத்தினர்.

Comments (0)
Add Comment