நன்றி மறவாத நல்ல மனம்!

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டனால் தங்கவேலு என மக்களால் அழைக்கப்பட்ட கே.ஏ.தங்கவேலு அவர்களிடம் பத்திரிகையாளர் ஒருவர், “எதற்காக நீங்கள் தீபாவளி பண்டிகை நாளில் லுங்கியும் தொப்பியும் போடுகிறீர்கள்” என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த தங்கவேலு, “தீபாவளி அன்று ஒரு நாடகம் போட்டேன். அப்போது துணி வாங்க என்னிடத்தில் காசு எதுவும் இல்லை.

அந்த நேரம் லுங்கி வியாபாரம் செய்யும் ஒரு பாய் எனக்கும் என்னுடைய நாடக கம்பெனியில் வேலை செய்கிறவர்களுக்கும் லுங்கியை அன்பளிப்பாக கொடுத்தார்.

நானும் என்னுடைய நாடகக் குழு அனைவரும் அன்று அவர் தந்த லுங்கியை அணிந்தோம். அவர் கொடுத்து உதவியை நினைவு கொள்ளும் ஞாபகமாக எனக்கு எவ்வளவு தான் வசதி வந்த போதும் தீபாவளி அன்று இந்த லுங்கியும் தொப்பியும் அணிந்து கொண்டிருக்கிறேன்” என்று சொல்லியுள்ளார்.

நன்றி மறவாத நல்ல மனம்…!

– நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment