தமிழகத்தில் ஒரே நாளில் 2,316 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது.

அதன்படி நேற்று தமிழகத்தில் கூடுதலாக 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 17 ஆயிரத்து 777- ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து நேற்று 2,458 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றும், தொற்று பாதிப்பால் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் கண்டறிய நேற்று 34 ஆயிரத்து 135 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும், அதில் தலைநகர் சென்னையில் 596- பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment