என் மகனை நான் பார்க்க மாட்டேன்…!

– நடிகர் நாகேஷ் நெகிழ்ச்சி

சினிமாவில் நாகேஷ் பிஸியாக இருந்த காலக்கட்டத்தில், ஆனந்த் பாபு பிறந்தார். தனக்குப் பிறந்த குழந்தையின் முகத்தை முதல் முதலாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல், ஒவ்வொரு தந்தைக்கும் இருக்கும் அல்லவா?

பாபுவை போய் பார்க்கவில்லை. உடனே சிலர் கேட்டார்கள், ஏன் போய் பார்க்கவில்லை என்று. அதற்கு நாகேஷ் சொன்னாராம், “என் முகத்தைப் பாருங்கள், அம்மைத் தழும்புகளால் எப்படி விகாரமாக இருக்கிறது என்று.

இந்த முகத்துடன் போய் பார்த்தால், என்னைப் பார்க்கும் அந்தக் குழந்தை பயந்துவிடாதா?” என்று. தன் முகத்தைப் பற்றி அந்த மாபெரும் கலைஞனுக்கு அவ்வளவு வருத்தமும், சோகமும் இருந்திருக்கிறது.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட பாலசந்தர், நாகேஷிடம்
சொல்லியிருக்கிறார், “டேய்… உனக்கு அழகு முகத்தில் இல்லை.

உன் நடிப்பில் இருக்கிறது. உன் இயல்பான நகைச்சுவை நடிப்பு தான் உனக்கு மிகப் பெரிய அழகு. முதலில் போய் உன் குழந்தையைப்பார்” என்று..

அதற்குப்பிறகு மனம் மாறிய நாகேஷ், தன் மகன் ஆனந்த் பாபுவை பார்த்து சந்தோஷப்பட்டு இருக்கிறார்.

அவ்வளவு மென்மையான கலைஞனுக்கு எவ்வளவு பெரிய மனப்போராட்டங்கள் இருந்திருக்கிறது பார்த்தீர்களா?

Comments (0)
Add Comment