குன்னூரில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலி!

சமவெளிப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் அவ்வப்போது பெய்து வந்த மழை காரணமாக சாலை ஓரங்களில் அதிகளவில் புற்கள் வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கிறது.

மேலும் பலாப்பழ சீசன் உள்ளதால் காட்டு யானைகள் உணவைத் தேடி குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளான பர்லியார், கல்லார், காட்டேரி, கொலக் கொம்பை பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் குன்னூர் கொலக்கொம்பை அருகே உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் சுற்றி திரிந்த ஆண் காட்டுயானை அப்பகுதியில் உயர்மின் அழுத்த தலைக்கம்பியில் மோதிய யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

இதனை அறிந்த குன்னுார் வனச்சரகர் சசிக்குமார் தலைமையில் அப்பகுதி சென்று ஆய்வு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment