சிறப்பு முகாமில் 18 லட்சம் டோஸ் தடுப்பூசி!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழகத்தில் நேற்று ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முதலமைச்சர் உத்தரவின் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 1 லட்சம் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

இதுவரை நடைபெற்ற 30 மெகா தடுப்பூசி முகாம்களில் 4 கோடியே 44 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள். இதுவரை 89.32% பயனாளிகளுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 61.63% பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

15 முதல் 17 வயதுயுடைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இதுவரை 30,23,682 பயனாளிகளுக்கு முதல் தவணையும் 25,5,819 பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முன்னெச்சரிக்கை தவணை வழங்கும் திட்டத்தின் மூலம் 18,5,929 பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 17,55,364 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது” என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment