அஞ்சல் பையில் தமிழ்: மக்கள் வரவேற்பு!

மதுரை அஞ்சல் பொருள் கூடத்தால் கொள்முதல் செய்யப்பட்டு,  அதற்குட்பட்ட 33 அஞ்சல் கோட்டத்திற்கு தபால் பைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அஞ்சல் பைகளில் முதன் முறையாக தமிழில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. தமிழுக்கு சங்கம் கண்ட மதுரையிலிருந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு இந்தி, ஆங்கில எழுத்துகளே இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அழகு தமிழில், அஞ்சல் துறை திட்டங்கள் குறித்த குறிப்புகளும் இடம்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு தரப்பிலும் வரவேற்பு பெற்றுள்ளது.

இதனிடையே, இதற்கான முயற்சிகள் மேற்கொண்ட மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வாழ்த்து கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment