இங்கிலாந்திற்கு எதிரான டி-20 : இந்திய அணி வெற்றி!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு நடைபெறும் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது.

இந்தியா-இலங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல்  20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 24 ரன்களும், தீபக் ஹூடா 33 ரன்களும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களும் எடுத்தனர்.

ஹர்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜசன்ராய் 4 ரன்களுடனும், கேப்டன் ஜாஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினார்கள். டேவிட் மலன் 21 ரன்களும், ஹாரி புரூக் 28 ரன்களும் எடுத்தனர்.

அதிகபட்சமாக மொயின் அலி 36 ரன்கள் எடுத்தார். 19.3 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களை கைப்பற்றினார். சாஹல் மற்றும் அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். புவனேஸ்குமார், ஹர்சல் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Comments (0)
Add Comment