சிவசேனாவிலிருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார்.

இதன்மூலம் அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். துணை முதலமைச்சராக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment