ஜூலை 18ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மழைக்கால கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

அதேவேளையில், அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதனால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் எனத் தெரிகிறது.

17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத் தொடரின்போது குடியரசுத் தலைவர் மற்றும்  துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment