மாணவர்கள் இடைவெளி விட்டு அமர வேண்டும்!

– சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கொரோனா தொற்று மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழக்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். கொரோனா தொற்று அதிகரித்தாலும் 5% பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இதனால் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவையில்லை. 31-வது கொரோனா தடுப்பூசி முகாம் ஜூலை 10-ம் தேதி நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இந்த முகாமை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவது மட்டுமே கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான சிறந்த வழிமுறை.

கல்வி நிலையங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வகுப்பறைகளில் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளி விட்டு மாணவர்கள் அமர வைக்க சுகாதாரத் துறை சார்பில் கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றுக் கூறினார்.

Comments (0)
Add Comment