மாணவர்களால் உருவாகும் நல்ல சமுதாயம்!

மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவையொட்டி புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் திருவுருவச் சிலைக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின் மாணவர்களின் நலன் குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பிள்ளைகளின் படிப்பில் தேவையில்லாமல் பெற்றோர்கள் தலையிட்டு கட்டாயப்படுத்தக் கூடாது. அவருடைய விருப்பம் அறிந்து, விரும்பிய பாடத்தைப் படிக்க வைக்க பெற்றோர்கள் உதவி செய்வதன் மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment