முள்ளை மலர வைத்தவர்கள்!

அருமை நிழல்:

ரஜினி எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் தற்போது நடித்துக் கொண்டிருந்தாலும் அவர் தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்று அடிக்கடி குறிப்பிடுவது இயக்குனர் மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தைத் தான்.

படத்தில் காளி என்கின்ற வேடத்தில் பாசமிகுந்த அண்ணனாக நடித்திருப்பார் ரஜினி.

பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்து ஜெயலட்சுமி, சரத்பாபு இணைந்து நடித்த அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

ரஜினியும் நினைவில் மட்டுமல்ல ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் இன்றைக்கும் போற்றப்படக் கூடிய படங்களில் ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது இயக்குனர் மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ திரைப்படம்.

Comments (0)
Add Comment