கவிதை போன்ற கதையோடு உருவான பாடல்!

இசையும் பாட்டும் இல்லாவிட்டால் திசைகள்கூட இயங்காது. தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று பாடல்கள். மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த பாடல் என்ற அற்புதத்தை எவன் கண்டு பிடித்தானோ.. நிச்சயமாக அவன் மகத்தானவனே.

தமிழில் இறைவனைப் பாடும் தேவாரப் பாடல்கள் தொடங்கி, திரையில் நடிகர்கள் பாடும் பாடல்கள் வரை எத்தனையோ வந்திருக்கின்றன.

ஒருகாலத்தில் ஒரு திரைப்படத்தில் இருபதுக்கும் அதிகமான பாடல்கள்கூட இடம்பெற்றன. தற்போது ஒன்றிரண்டு பாடல்கள் என சுருங்கிவிட்டன.

திரைப்படத்தில் பாடல்கள் சுருங்கிவிட்டாலும் தனியிசை ஆல்பங்கள் தற்போது கணிசமாக வரத் துவங்கிவிட்டன. அதில், நல்ல பாடல்கள் மட்டும் சிறப்பான வரவேற்பைப் பெறுகின்றன.

அப்படியொரு வரவேற்பை பெறவே தற்போது வட்டல் ஸ்டியோஸ் தயாரிப்பில் தனியிசைப் பாடல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

நகராதே என்ற வரியில் தொடங்கும் இப்பாடலை அஷ்வின் ராஜ், தன் நல்ல இசையால் உருவாக்க கு.கார்த்திக் எழுதியுள்ளார்.

தங்கள் வசீகரக் குரலால் நிவாஸ் கே. ப்ரசன்னாவும் ஸ்வாகதா எஸ். கிருஷ்ணனும் பாடியுள்ளனர். இசையும் வரிகளும் குரலும் மட்டுமா தனியிசைப்பாடல்?

அந்தப்பாடலை கண்கொண்டு பார்த்து இன்புற வேண்டாமா? எனவே பாடலை மிக அழகான காட்சிகளாக இயக்கியிருக்கிறார் நாஷ். பாடல் காட்சியில் நாயகனாக விஜே மாதேவன், நாயகியாக பாடலைப் பாடியுள்ள ஸ்வாகதா கிருஷ்ணன் நடித்துள்ளனர்.

ஷாரஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த நகராதே பாடல் 2கே கிட்ஸ் மட்டுமின்றி எல்லோரிடமும் பலத்த வரவேற்பைப் பெற்றுவருகிறது

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment