திருமூர்த்திக்கு ரகுமான் தரும் இசைப் பயிற்சி!

செலவை ஏற்கும் கமல்ஹாசன்.

கமல்ஹாசனே எழுதிப் பாடிய ‘பத்தல பத்தல’ பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவற்பைப் பெற்றது.

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி இந்தப் பாடலைப் பாடி இணையத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

பாடகர் திருமூர்த்தியை நேரில் வரவழைத்துப் பாராட்டினார் கமல்ஹாசன்.

திருமூர்த்தியின் விருப்பம் இசைக்கலைஞர் ஆகவேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட கமல், அதற்குரிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் பேசினார்.

திருமூர்த்தியை தனது கே.எம் கன்சர்வேட்டரி இசைப் பள்ளியில் சேர்த்துக் கொள்வதாக ரகுமான் உறுதியளித்தார்.

திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக் கொள்கிறேன் என கமல் அறிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment