தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

சுகாதாரத் துறை எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இதுவரை 34 லட்சத்து 63 ஆயிரத்து 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை மொத்தம் 38,026 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 4,678 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று 459 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளதால், இதுவரையில் 34,20,364 பேர் குணம் அடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 345 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

Comments (0)
Add Comment