அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக அவகாசம் தேவை!

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி, ராகுல் காந்தி ஜூன் 13 முதல் 21 வரை 5 நாள்கள் ஆஜராகினார். அவரிடம் 53 மணி நேரங்கள் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் தொடர்புடைய சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால்  அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. அதனால், ஜுன் 23-ம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாலும் உடல்நிலை சீராக இல்லாததால் விசாரணைக்கு ஆஜராக மேலும் சில வாரங்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என அமலாக்கத் துறையிடம் சோனியா காந்தி கோரிக்கை வைத்திருந்தார்.

சோனியா காந்தியின் கோரிக்கையை அமலாக்கத்துறை ஏற்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விசாரணைக்கு ஆஜராகும் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Comments (0)
Add Comment