அன்பில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாது போகும்!

நினைவில் நிற்கும் வரிகள்:

***** 

அன்பு என்பதே தெய்வமானது 
அள்ளி அள்ளி கொடுத்தபோதும் குறைவில்லாதது
கள்ளருக்கும் காவலுக்கும் எளிமையானது
உள்ளமென்பதுள்ளவர்க்கு உண்மையானது
உலகமென்பதுள்ளவரை உறுதியானது

அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது…

மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது

இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது

அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது…
அன்பு என்பதே தெய்வமானது

அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது
அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது

பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது…..

(அன்பு)

பொன் படைத்த மனிதர்
கோடி நகைகள் வாங்கலாம்

பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்

அன்பு என்னும் பொருளை
எந்த உலகில் வாங்கலாம்
நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும்
மனையில் வாங்கலாம்
நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும்
மனையில் வாங்கலாம்

(அன்பு)

– 1963-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பில் வெளியான ‘ஆசை அலைகள்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். இசை – கே.வி.மகாதேவன்.

Comments (0)
Add Comment