டி20 தொடர்: இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா!

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாட உள்ளது. டப்ளின் நகரில் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய நாட்களில் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.

இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 17 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் துணை கேப்டனாக செயல்படுவார்.

காயத்திலிருந்து மீண்ட சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்பி உள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடி கவனம் பெற்ற மகாராஷ்டிர மாநில வலது கை பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி, சர்வதேச போட்டியில் அறிமுகமாகிறார்.

அயர்லாந்தில் விளையாடவுள்ள இந்திய அணி விவரம்:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

Comments (0)
Add Comment