உலகை அச்சுறுத்தும் நோய்ப் பட்டியலில் குரங்கு அம்மை?

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இந்நிலையில், சர்வதேச அளவில், கொரோனா போன்று பொதுசுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியது.

இதன் பாதிப்பு சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையை பிரதிபலிக்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கு சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ் ஜூன் – 23 ஆம் தேதி அவசர கமிட்டியைக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment