பாடப் புத்தகங்களில் பாலியல் விழிப்புணர்வு வாசகங்கள்!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சமீப காலமாக மாணவியருக்கு பாலியல் பிரச்சனைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில் தங்கள் பிரச்சனையை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கும் மாணவியர் சில நேரங்களில் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர்.

புதிய கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு வந்துள்ளன.

அதில் கல்வித் தகவல் மையம் எண் – 14417 ‘சைல்ட் லைன்’ எனப்படும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் எண் – 1098 மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் பாடப் புத்தகங்களின் பின்புற அட்டையில் அச்சிடப்பட்டுள்ளன.

இது கல்வியாளர்கள் பெற்றோர் மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Comments (0)
Add Comment