பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்!

  • மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் ஜூன் 13-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன.

பள்ளிகள் திறப்பையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து இறையன்பு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘2 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பதால் தீவிரமாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பள்ளிகளில் தூய்மை இயக்கத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகளைத் தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்கக் கூடாது எனக் கூறியுள்ள தலைமைச் செயலாளர், பள்ளிகளைப் புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments (0)
Add Comment