இல்லாமை இங்கு நீங்க வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்:

*****

அன்னமிட்ட கை
நன்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து

(அன்னமிட்ட)

இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும்
இங்கு எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம் வேண்டும்
தன் உழைப்பாலே உண்ண வேண்டும்!

பாடுபட்ட கை அது பாட்டாளி கை
செய்யும் தொழிலை தெய்வமாக
நிலை நிறுத்தி உடல் வருத்தி

(அன்னமிட்ட)

பஞ்சுக்குள் நூலை எடுத்து
பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து
பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க

வாழ வைக்கும் கை
அது ஏழை மக்கள் கை
காட்டை மேட்டைத் தோட்டமாக்கி
நாட்டு மக்கள் வாட்டம் போக்கி

(அன்னமிட்ட)

– 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘அன்னமிட்ட கை’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி, இசை: கே.வி. மகாதேவன். குரல்: டி.எம். சௌந்தரராஜன்.

Comments (0)
Add Comment