உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியது ரஷியா!

 -அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புதல்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 100-வது நாள் ஆகும். இந்த போரில் உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது.

இதை ஒப்புக்கொண்ட அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி லக்சம்பார்க் நாடாளுமன்றத்தில் காணொலிக் காட்சி வழியாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “உக்ரைனின் 1 லட்சத்து 25 ஆயிரம் ச.கி.மீ. பகுதி தற்போது ரஷ்யாவின் கைகளுக்கு போய் உள்ளது. இதில் கிரீமியா, கிழக்கு உக்ரைன் பகுதிகளும் அடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment