அற்புதம் அம்மா…!

இந்த நாளுக்காக நான் இந்த ஓவியத்தை பத்திரமாக வைத்திருந்தேன். எத்தனை வலி நிறைந்த தோள்கள் அவருடையவை.

எத்தனை வலிமை வாய்ந்தவை அவரின் கால்கள். கலங்கியதும் கலங்காததுமாக அவரின் கண்கள்.

தொலைந்துபோன மகனைக் கண்டெடுத்தும் வீட்டிற்கு அழைத்துச் செல்லமுடியாத மனத்தின் பாரம் அளவிட முடியாதது.

விடுதலை – என்னும் ஒற்றைச் சொல்லில் ஒரு நீண்ட பெருமூச்சில் எல்லா துயரங்களையும் வெளியேற்றியிருப்பார்.

அற்புதம் அம்மா!

நன்றி: யாழன் ஆதி முகநூல் பதிவு

Comments (0)
Add Comment