தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ் குமார், நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்.பிக்களின் பதவிக்காலம் வரும் ஜுன் 29 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.

காலியாக உள்ள இந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கும் ஜூன் 10ம் தேதி தேர்தல் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Comments (0)
Add Comment