நெறி தவறி நடந்து விடாதே…!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
ஏன் படித்தோம்
என்பதையும்
மறந்து விடாதே 

நாட்டின் நெறி தவறி
நடந்து விடாதே
நல்லவர்கள் தூற்றும் படி
வளர்ந்து விடாதே – நீ

(ஏட்டில்)

மூத்தோர் சொல் வார்த்தைகளை
மீறக் கூடாது – நீ
மூத்தோர் சொல் வார்த்தைகளை
மீறக் கூடாது – பண்பு
முறைகளிலும் மொழிதனிலும்
மாறக்கூடாது
மாற்றார் கைப் பொருளை நம்பி
வாழக் கூடாது – தன்
மானமில்லாக் கோழையோடு
சேரக் கூடாது – நீ

(ஏட்டில்)

துன்பத்தை வெல்லும் கல்வி
கற்றிட வேணும்
சோம்பலைக் கொல்லும் திறன்
பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால்
விட்டிட வேணும் – நீ
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத்
தொட்டிட வேணும்
(ஏட்டில்)

வெற்றி மேல் வெற்றி வர
விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல்
விளங்கிட வேணும்
பெற்ற தாயின் புகழும் – நீ
பிறந்த மண்ணின் புகழும் ஆ
வற்றாமல் உன்னோடு
வளர்ந்திட வேணும் – நீ

(ஏட்டில்)

-1961-ம் ஆண்டு சந்திரபாபு, எம்.என்.ராஜம் நடிப்பில் வெளிவந்த ‘குமாரராஜா‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இசை : டி.ஆர்.பாப்பா குரல் : பி. லீலா. இயக்கம் : ஜி.கே.ராமு

Comments (0)
Add Comment