மக்களே திருந்திக் கொள்கிறார்கள்!

தடைச் சட்டங்கள்

மிகுதியாக ஆக

மக்கள்

மேலும் மேலும் வறுமையடைகிறார்கள்.

கூர்மையான ஆயுதங்கள்

குவியக்குவிய

நாட்டில் குழப்பம் பெருகிறது.

தொழில் நுணுக்கம்

வளர வளர

வஞ்சகப் பொருட்கள்

மிகுதியாகின்றன.

சட்டங்கள் பெருகப் பெருகத்

திருடர்கள் பெருகுகிறார்கள்.

எனவே

ஞானி கூறுகிறான்;

“நான் தலையிடுவதில்லை.

மக்கள் தாமே

திருந்திக் கொள்கிறார்கள்”

  • சீன அறிஞர் தாவோ. தமிழில்: கவிக்கோ அப்துல் ரகுமான்
Comments (0)
Add Comment