வடக்கே பெரியாருக்கு விழா எடுத்த கான்ஷிராம்!

1995 ஆம் ஆண்டு. உத்தரப்பிரதேசம் லக்னோவில் பெரியாரின் 117 ஆவது விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியவர் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கான்ஷிராம்.

அப்போது உ.பி. முதல்வராக இருந்த மாயாவதியும் கலந்து கொண்ட விழாவில் பெரியாரைப் பற்றிய பல நிகழ்ச்சிகள் பல மாநிலங்களிலிருந்து நிகழ்த்தப்பட்டன.

பெரியாரின் பல நூல்கள் இந்தி மொழியில் வெளியிடப்பட்டன. பெரியாரின் வரலாற்றை இந்தியில் எழுதியவரான பிரிஜ்லால் வர்மாவும் விழாவில் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் பேசும்போது கன்ஷிராம் சொன்னார்.

“பெரியார் தலித் அல்ல, ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் தலித்துகளுக்காகவே குரல் கொடுத்தார் என்பது உண்மை.”

Comments (0)
Add Comment