அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

அருமை நிழல்:

‘உயர்ந்த மனிதன்’ படத்தில் டி.எம்.எஸ் ஓடிவந்து மூச்சிரைத்தபடி பாடும் “அந்த நாள் ஞாபகம்” பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இசையமைத்தவர் எம்.எஸ்.வி.

மேடை நிகழ்ச்சி ஒன்றில் நினைவு மறதியாக அந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியதாக எம்.எஸ்.வி சொல்லிவிட, மேடையிலிருந்த கவிஞர் வாலி மென்மையாக அந்தத் தவறைச் சுட்டிக் காட்டியதும், உடனே “ஸாரி” கேட்டுக் கொண்டிருக்கிறார் எம்.எஸ்.வி.

நேர்ப்பேச்சில் வாலி பகிர்ந்து கொண்ட தகவல் இது.

Comments (0)
Add Comment