நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தைக் கைவிடுக!

– பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்படும் ஆய்வகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது என மத்திய அணுசக்தித் துறை தெரிவித்தது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தில், “தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கக் கூடாது. நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment