மோடியின் தவறான கருத்துக்கு இரையாகாதீர்கள்!

– தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா என ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று (மார்ச் 10) வெளியானது. இதில், 4 மாநிலங்களில் பா.ஜ.க அமோக வெற்றிப்பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் டெல்லியில் உள்ள பா.ஜ.க, தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது, “இந்த 4 மாநிலங்களில் கிடைத்துள்ள வெற்றி 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் நிச்சயம் எதிரொலிக்கும்” எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் பா.ஜ.க,வின் வெற்றி குறித்தும், பிரதமரின் இந்தப் பேச்சு தொடர்பாகவும் கருத்து தெரிவித்துள்ள தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்,

“இந்தியாவுக்கான யுத்தம் 2024-ல் நடத்தப்பட்டு முடிவு எட்டப்படுமே தவிர மாநில தேர்தலை வைத்து அல்ல. அவருக்கு (பிரதமர் நரேந்திர மோடிக்கு) இது தெரியும்.

இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்து உளவியல் ரீதியிலான ஆதாயத்தை பெற மேற்கொள்ளப்பட்ட புத்திசாலித்தனமான முயற்சி இது. இந்தத் தவறான கருத்துக்கு இரையாகாதீர்கள், நம்பிவிடாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

11.03.2022  5 : 30 P.M

Comments (0)
Add Comment