ஆக்‌ஷன் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கோடம்பாக்கத்தின் சிறந்த நடிகையாக, ‘டஸ்கி பியூட்டி’ என போற்றப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். வித்தியாசமான கதைக் களத்தில் கதையின் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல திருப்பங்கள் நகைச்சுவை, சண்டை காட்சிகள் நிறைந்த பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகியாக வலம் வரவிருக்கிறார்.

ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் பட நிறுவனங்கள் இணைந்து ‘புரொடக்ஷன் நம்பர் 1’ என்ற பெயரில் புதிய படத்தைத் தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தை லாக்கப் படத்தின் இயக்குனர் S.G.சார்லஸ் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன் நடிகை லட்சுமி பிரியா, நடிகர்கள் சுனில் ரெட்டி, கருணாகரன், மைம் கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

பாலமுருகன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கலை இயக்கத்தை ரவி கவனிக்கிறார்.

படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.

சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை வென்றிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

-யாழினி சோமு

08.03.2022 12 : 30 P.M

Comments (0)
Add Comment