தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமல்!

– தியேட்டர்கள், உணவகங்கள், வணிக வளாகங்களில் 100 சதவீதம் அனுமதி

ஒமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தொற்றுப் பரவல் குறைந்திருப்பதால் மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டன.

புதிய தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தது.

அதன்படி திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் பொருட்காட்சிகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்களுக்கும் 50% நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடும் இன்று முதல் தளர்த்தப்படுகிறது.

அதே சமயம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை மட்டுமே பங்கேற்கலாம் என்ற நடைமுறை அப்படியே தொடர்கிறது. அரசியல் பொதுக் கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.

மேலும் தமிழகத்தில் இயங்கும் 10 ஆயிரம் நர்சரி, விளையாட்டுப் பள்ளி, கிரீச்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் ஆகியவற்றில் நடத்தப்படும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் இன்று முதல் செயல்பட உள்ளன.

Comments (0)
Add Comment