சிவாஜி மீது ஏன் சார் கோபம்?

பரண்: 

”சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்போடு என் நடிப்பை… சார்.. உங்களுக்கு சிவாஜி அவர்கள் மீது ஏன் சார் கோபம்? அவர் நடிப்பில் நூற்றில் இரண்டு பங்கு எனக்கு வந்தாப் போதுமே…!

எனக்கு ஈடாக நடிக்க நடிகரே இல்லை என்றெல்லாம் கூறி என்னை சினிமாவுலகை விட்டே விரட்டாதீர்கள்.

அப்படி யாரும் இல்லை என்றால் நான் எப்படி நடித்திருக்க முடியும்? அந்த அளவுக்கு நான் தகுதியா?

இறைவன் என்னைப் படைத்தான். கலையுலகம் என்னை வளர்த்தது. ரசிகர்களாகிய நீங்கள் என்னைக் காப்பாற்றுகிறீர்கள்…”

– ரசிகர்கள் தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மனோரமா அளித்த பதில்…

துக்ளக் (15.12.1971) இதழிலிருந்து…

Comments (0)
Add Comment