இளையராஜாவுக்கு நான் உதவினேனா?

ஜெயகாந்தன் பதில்

*

கேள்வி : இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு நீங்கள் தான் ஆரம்பத்தில் உதவி செய்தீர்கள் என்று அவரே ஒரு பேட்டியின் போது சொன்னாரே, உண்மை தானா?

ஜெயகாந்தன் பதில்: நான் அவ்விதமெல்லாம் யாருக்கும் எந்த உதவியும் செய்ததில்லை. நான் செய்யும் உதவி என்னை நாடி வருவோருக்கு நம்பிக்கை தருவது தான்.

இளையராஜா சகோதரர்கள் எனக்குத் தெரிந்தவர்கள். அவர்கள் சினிமா சான்ஸூக்காக சென்னை வந்தபோது, “உங்களை நம்பி வந்திருக்கிறோம்’’ என்றனர்.

“என்னை நம்புவதை விட, உங்களையே நம்பி முயற்சி செய்யுங்கள்’’ என்று சொல்லி அனுப்பினேன். இதெல்லாம் உதவி ஆகிவிடுமா?

  • ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்த ‘கல்பனா’ இதழில் வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இப்படிப் பதில் அளித்திருந்தார் ஜெயகாந்தன்.

ஜெயகாந்தனின் ‘கல்பனா – கட்டுரைகள், கேள்வி-பதில்கள்’
வெளியீடு: ஜெ.கே. வாசகர் வட்டம், சென்னை.

15.02.2022 12 : 30 P.M

Comments (0)
Add Comment