ஊரார் வெறுத்தாலும், உலகம் பழித்தாலும்…!

நினைவில் நிற்கும் வரிகள்:

***
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணி ஓசை

(தேவன்)

ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
உதவும் கோவில் மணி ஓசை
தாயார் வடிவில் தாவி அணைத்தே
தழுவும் நெஞ்சின் மணி ஓசை
இது உறவினைக் கூறும் மணி ஓசை
இவன் உயிரினைக் காக்கும் மணியோசை

(தேவன்)

அருமை மகனே என்றொரு வார்த்தை
வழங்கும் கோவில் மணி ஓசை
அண்ணா அண்ணா என்றோர் குரலில்
அடங்கும் கோவில் மணி ஓசை
இது ஆசைக் கிழவன் குரல் ஓசை
அவன் அன்பினைக் காட்டும் மணி ஓசை

(தேவன்)

– 1963-ம் ஆண்டு வெளிவந்த ‘மணியோசை’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். குரல்: சீர்காழி கோவிந்தராஜன். இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி.

Comments (0)
Add Comment