ஒமிக்ரான் பரவல்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்துள்ளதால் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் ஒமிக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது.

இதனால் வைரஸ் பரவலைத் தடுக்க, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, “அலுவலகங்களில் பணிபுரியும் போது முக‌க்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

அறிகுறி உள்ள பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

300 நபர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment