நீங்கள் தான் இந்தியாவின் சொத்து!

– தோழர் ஜீவானந்தம் குறித்து காந்தி கூறியவை

பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தில் 17-வது வயதிலேயே கலந்து கொண்டவர் ஜீவானந்தம். காரைக்குடியில் உள்ள சிராவயல் கிராமத்தில் ஏழை மாணவர்களுக்காக காந்தி ஆசிரமம் ஒன்றைத் தொடங்கி நடத்தினார்.

அங்கு காந்தி வர வேண்டும் என விரும்பினார். இதைக் கேள்விப்பட்டு காரைக்குடிக்கு வந்திருந்த காந்தி, ஜீவாவைப் பற்றி அறிந்து, சிராவயல் ஆசிரமத்திற்கு நேரில் சென்று பார்த்தார்.

ஜீவாவிடம் ஆசிரமம் நடத்த சொத்து ஏதாவது வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு எனக்கு ஏது சொத்து? நாடு தான் என்னுடைய ஒரே சொத்து என்று பதிலுரைத்தார் ஜீவா.

அதைக்கேட்டு நெகிழ்ந்துபோன காந்தி “இல்லை இல்லை நீங்கள் தான் இந்தியாவினுடைய சொத்து” என்றார்.

தோழர் ஜீவானந்தம் குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு, எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment