எல்லோரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்!

– நடிகை ஷோபனா வேண்டுகோள்

நாடு முழுவதும் கொரோனா மற்றும் உருமாற்றம் அடைந்த புது வகை ஒமிக்ரான் வைரஸும் மீண்டும் தீவிரமாகப் பரவி வருகிறது.

நடிகர், நடிகைகள் உட்பட ஏராளமான திரைக் கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான ஷோபனாவுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், “கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்ட போதும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. முதல்நாளில் மூட்டுவலி, குளிர், தொண்டை கரகரப்பு அறிகுறிகளாக இருந்தன.

பின்னர், ஒவ்வொரு நாளும் அவை குறைந்து வருகின்றன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொற்று வேகமாகப் பரவுவதை அது தடுக்கிறது என நம்புகிறேன்.

நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால், உடனடியாகச் செலுத்திக் கொள்ளுங்கள். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.

இந்த ஒமிக்ரானுடன் வைரஸ் தொற்று முடிவுக்கு வர வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறேன்” என ஷோபனா தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment