நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி!

திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாப்பர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (டிச.,17) காலை கழிவறை சுவர் இடிந்து விழுந்தது.

இதில் அன்பழகன் (9ம் வகுப்பு), விஸ்வ ரஞ்சன் (8ம் வகுப்பு), சுதீஸ் (6ம் வகுப்பு) ஆகிய மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 4 மாணவர்கள் படுகாயங்களுடன் திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியிலிருந்து பிற மாணவர்களை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

சக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கு முன் மாணவர்கள் ஒன்றுக்கூடி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட கல்வி அதிகாரிக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments (0)
Add Comment