இப்படியும் ஒரு போட்டி…!

சென்னை, சேத்துபட்டு அருகே வீடு ஒன்றில் பெண்கள் சட்டத்திற்கு விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின்படி அந்தப் பகுதியை காவல்துறையினர் கண்காணித்தனர். அப்போது, வீடு ஒன்றில் பெண்கள் பலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பலர் பணத்தை இழந்தும் தங்கள் கையில் இருந்த பொருட்களை வைத்தும் விளையாடி உள்ளனர்.

உடனே காவல்துறையினர் அங்கே சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரத்து 700 பணம் மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் கைது செய்யப்பட்ட 11 பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கடுமையாக எச்சரிக்கை செய்து, பின்னர் அனைவரையும் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

பெண்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments (0)
Add Comment