வறுமையும் செழுமையும் வரும் வாழ்க்கை ஒன்று தான்!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

இரவு வரும் பகலும் வரும்
உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும்
இதயம் ஒன்று தான் 

(இரவு வரும்…)

பெருமை வரும் சிறுமை வரும்
பிறவி ஒன்று தான்
வறுமை வரும் செழுமை வரும்
வாழ்க்கை ஒன்று தான் 

(இரவு வரும்…)

இளமை வரும் முதுமை வரும்
உடலும் ஒன்று தான் 
தனிமை வரும் துணையும் வரும்
பயணம் ஒன்று தான் 

(இரவு வரும்…)

விழி இரண்டு இருந்த போதும்
பார்வை ஒன்று தான் 
வழிபடவும் வரம் தரவும்
தெய்வம் ஒன்று தான்

(இரவு வரும்…) 

– 1965-ம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளிவந்த ‘இரவும் பகலும்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் ஆலங்குடி சோமு.

Comments (0)
Add Comment