ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்!

– தமிழக அரசு உத்தரவு

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சொத்து விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழகத் தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில்;

“மத்திய அரசின் உத்தரவுப்படி, தமிழகத்தில் பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களின் அசையா சொத்து விவரங்களை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், அவர்களின் குடும்பத்தினர் யார் பெயரில் சொத்து இருந்தாலும் அந்தக் கணக்க்தை தாக்கல் செய்ய வேண்டும்.

வரும் ஜனவரி 31-க்குள் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment