மயானங்களில் சாதிப்பெயர் பலகைகளை நீக்க வேண்டும்!

– உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூரில் அருந்ததியர் சமுதாயத்திற்காக மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாதிப் பாகுபடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை ஒவ்வொரு ஊரிலும் அமைக்க வேண்டும்” என உத்தரவிட்டது. 

மேலும், ஏற்கனவே மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை உடனடியாக நீக்க வேண்டும் எனவும், பொது மயானங்களை உருவாக்கியுள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments (0)
Add Comment