தொழில்நுட்பத்திலும் ஞானி!

அருமை நிழல்:  

*

இளைய ராஜாவுக்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பலரும் அறிந்த ஒன்று தான்.

திருவண்ணாமலையில் ரமணர் ஆசிரமம், விசிறிச் சாமியார், மாயம்மா என்று மகான்களாகத் தான் கருதும் பலரைச் சந்தித்திருக்கிற ராஜா “உயிரும், உணர்வும் உள்ள ஞானிகளின் முன்னால் மௌனமாக அமர்ந்தால், மனம் சாந்தியடைகிறது” என்பார்.

ஒருமுறை மூகாம்பிகை கோவிலுக்கு இளையராஜா தன் சகோதரர்கள் பாஸ்கர், கங்கை அமரனுடன் சென்று வீடியோ காமிரா வழியே படம் பிடித்த போது எடுக்கப்பட்ட படம் இது.

இசையில் மட்டுமல்ல, தொழில்நுட்பத்திலும் ராஜா ‘ஞானி’ தான்!

Comments (0)
Add Comment